ஆக்ரா: ஜூலை 6 முதல் திறக்கப்படுவதாக இருந்த சுற்றுலாத் தலங்கள், ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து திறக்கப்படவில்லை.
ஆக்ராவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக, இன்று திறக்கப்படுவதாக இருந்த தாஜ்மகால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது என்று ஆக்ரா மாவட்ட நீதிபதி பிரபு சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 நாள்களில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 71 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. எனவே, இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவுக்கு வரத் தொடங்கினால் மேலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் உள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரபு சிங் கூறினார்.
முன்னதாக, ஜூலை 6 முதல் இந்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


