/

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

இந்தியாவில் திங்கள்கிழமை மதியம் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

Updated On :6 ஜூலை 2020, 7:28 am

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது
புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை முற்பகல் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 7 லட்சத்தை எட்டும் நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை ஒரு கோடியை எட்டிவிட்டது.

நேற்று ஒரே நாளில் நாட்டில் 24,248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.

ஐசிஎம்ஆர் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், திங்கள்கிழமை முற்பகல் 11 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 1,00,04,101 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.