/

தில்லியில் கடும் மூடுபனி காரணமாக 14 ரயில்கள் தாமதம் 

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக

News image
Updated On :28 ஜனவரி 2020, 6:19 am

புது தில்லி:  தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 14 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. அதன்படி, ராஜதானி மற்றும் சதாப்திகளும்  சரியான நேரத்தில் வந்திருந்தாலும், ஒரு டுரான்டோ ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. 

கதிஹார்-தில்லி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் இரண்டரை மணி நேரம் தாமதமானது. இஸ்லாம்பூர்-தில்லி மகத் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்-நிஜாமுதீன் தக்ஷின், மும்பை-அமிர்த்சரஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் ரக்ஸால்-ஆனந்த் விஹார் சத்தியகிரஹா ஆகிய ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக இயங்கின. 

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மூடுபனி நிலவுவதால், ரயில்கள் சிறிது தாமதத்துக்குப் பிறகு இயக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.