/

திருமணத்துக்கு சென்றவர்கள் கார் விபத்து: 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் ஷாஜகஹான்பூரில் ஒரு கார் மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து திருமண விருந்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜனவரி 2020, 8:26 am

உத்தரபிரதேசத்தின் ஷாஜகஹான்பூரில் ஒரு கார் மரத்தில் மோதி, பள்ளத்தில் விழுந்து 5 பேர்  உயிரிழந்தனர்.

இந்த விபத்து சதா கிராமத்திற்கு அருகே திங்கள்கிழமை இரவு நடந்தது, மேலும் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் ஷாஜகான்பூரில் உள்ள சாந்திபுரம் காலனியில் வசிப்பவர்கள்.

அந்த 5 பேரும் ஷாஜகான்பூரிலிருந்து பிலிபித்துக்கு ஒரு திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ளச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓட்டுநர் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

வாகனம் நொறுங்கி, கிட்டத்தட்ட இரும்புக் குவியலாகக் காணப்பட்ட நிலையில், அரும்பாடுபட்டுத்தான் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.  உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, தற்போது போலீஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.