மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உ.பி.யில் வெடிகுண்டு மிரட்டல்: சமூக ஊடகங்களில் அச்சுறுத்திய நபர் கைது 

உத்தரப் பிரசேதத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக குறுந்தகவல் மூலம் அச்சுறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2020, 6:36 am

தியோரியா: உத்தரப் பிரசேதத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

மாக் மேளா மற்றும் தியோரியா மஹோத்ஸவ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தபப்டும் என கடந்த புதன்கிழமையன்று மர்ம நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வந்தார். 

இந்நிலையில், ராம்பூர் கர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் அந்த குறுந்தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விசாரணை மேற்கொண்டார். 

விஷ்ணுபூர் சிர்கிஹ்வாவில் வசிக்கும் நசிருதீன் அன்சாரிக்கு சொந்தமான தொலைப்பேசி எண்ணிலிருந்து இந்த செய்தி முதல்முறையாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அன்சாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.