மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள விரிவாகத் தயாராகும் ஹரியாணா!

விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள ஹரியாணா தயாராகி வருவதாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துளார்.

News image

வெட்டுக்கிளித் தாக்குதல்

Updated On :6 பிப்ரவரி 2020, 12:09 pm

சண்டிகர்: விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள ஹரியாணா தயாராகி வருவதாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துளார்.

ஹரியாணாவின் அண்டை மாநிலங்களான பஞ்சாப்  மற்றும் ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதல் சேதத்தை உண்டாகியுள்ளதாகத் தகவல்கல் வெளியாகின. இதையடுத்து அண்டை மாநிலமான ஹரியாணா வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள  தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது:

இந்த சூழலை எதிர்கொள்ளவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் தங்கள் நிலத்தை ஆய்வு செய்து வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

இதுதொடர்பாக விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பஞ்சாப்  மற்றும் ராஜஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்புற மாவட்டங்களான சிஸ்ரா, பதேபாத் மற்றும் ஹிஸார் உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வெட்டுக்கிளித் தாக்குதலின் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.