மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வன்முறையைத் தூண்டுகிறார்: தில்லி துணை முதல்வர் மீது கிரிமினல் வழக்குப் பதிய மனு

வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

மணிஷ் சிஸோடியா

Updated On :6 பிப்ரவரி 2020, 11:37 am

புது தில்லி: வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியன்று தில்லி ஜாமியா நகரில் போராட்டங்கள் நடந்தது.அப்போது அரசு பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் , ' தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பாஜக பேருந்துகளை எரிக்கிறது. எந்த விதமான வன்முறையையும் ஆம் ஆத்மி எதிர்க்கிறது. காவல்துறை பாதுகாப்பபுடன் பேருந்துகள் எரிக்கப்படுவதை நீங்களே பாருங்கள்' என்று கூறி விடியோ ஒன்றையும் இணைத்திருந்தார். அது பலராலும் அதிகமான அளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில் வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவத்சவா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 'மணீஷ் சிஸோடியா தனது பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான காரியத்தின் மூலம் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தவறான தகவல்களை பரப்பியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504 மற்றும் 505-ன் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கானது வெள்ளிக்கிழமை  விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.