புது தில்லி: வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியன்று தில்லி ஜாமியா நகரில் போராட்டங்கள் நடந்தது.அப்போது அரசு பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் , ' தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பாஜக பேருந்துகளை எரிக்கிறது. எந்த விதமான வன்முறையையும் ஆம் ஆத்மி எதிர்க்கிறது. காவல்துறை பாதுகாப்பபுடன் பேருந்துகள் எரிக்கப்படுவதை நீங்களே பாருங்கள்' என்று கூறி விடியோ ஒன்றையும் இணைத்திருந்தார். அது பலராலும் அதிகமான அளவில் பகிரப்பட்டது.
இந்நிலையில் வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவத்சவா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 'மணீஷ் சிஸோடியா தனது பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான காரியத்தின் மூலம் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தவறான தகவல்களை பரப்பியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504 மற்றும் 505-ன் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கானது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


