நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கரோனாவை வெல்வதற்காக தலையை மொட்டை அடித்துக் கொண்ட 68 காவலர்கள்

கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

News image
கரோனாவிற்கு எதிரான போர்
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

IANS

ஆக்ரா: கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 68 காவலர்கள்தான் இவ்வாறு கரோனவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியேற்று தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர்.    

மொட்டை அடித்துக் கொண்ட காவலர்கள் பதேபூர் சிக்ரி நகர வீதிகளில் அணிவகுப்பில் சென்ற விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது .

கரோனாவிற்கு எதிராக இறுதி வரை உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்ததாக நிலைய காவல் அதிகாரி புபேந்திர பலியான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.