நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

தொல்லைப்படுத்தும் அழைப்புகள்: செல்போனை அணைத்து வைத்த முன்னாள் முதல்வர்

தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது செல்போனையே அணைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

News image
திக்விஜய் சிங்
Updated On :27 ஜனவரி 2024, 4:21 pm

IANS

போபால்: தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது செல்போனையே அணைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த நான்கைந்து நாட்களாக தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதுபற்றி மாநில டிஜிபி மற்றும் அலைபேசி நிறுவனத்திடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே நான் எனது அலைபேசியை அணைத்து வைத்து ட்டேன். ஆனால் என்னை போபாலில் உள்ள எனது வீட்டு லேண்ட்லைன் எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்பில்லாத நபர்கள் அவரை அலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதால்தான் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று திக்விஜய் சிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.