ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

News image
Updated On :24 செப்டம்பர் 2019, 12:35 pm

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், "நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. 

மேலும், கலால் வரியை உயர்த்தி பெட்ரோல் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கலால் வரி மட்டுமே, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.15 இருந்து வருகிறது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 8% பேர். அதாவது, 8 கோடி மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். 

பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டில் ஆட்டோ மொபைல் துறை சரிவடைந்துள்ளது. ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பல மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

விவசாயத்திலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. நாட்டில் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தில்லியில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது.  பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இங்கு அரங்கேறுகின்றன. 

இதுபோன்று நாட்டில் நிலவும் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் உரிய பதில் அளிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.