ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள்; 1079 கொலைகள்: உறைய வைக்கும் ஒதிஷா

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஒதிஷாவில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் 1079 கொலைகள் நடைபெற்றுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image

ஒதிஷாவில் குற்ற வழக்குகள்

Updated On :25 நவம்பர் 2019, 11:23 am

புவனேஸ்வர் ; இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஒதிஷாவில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் 1079 கொலைகள் நடைபெற்றுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, மாநில உள்துறை அமைச்சர் திப்யாஷங்கர் மிஸ்ரா கூறியதாவது:

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதாவது செப்டம்பர் மாத இறுதி வரை, ஒதிஷாவில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள், 1079 கொலைகள் மற்றும் 406 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், பதிவு செய்யப்பட்ட 1865 பாலியல் வமுறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1149 வழக்குகள் பதிவு செய்ப்பட்டுள்ளதாகவும், அதில் 604 வழக்குகள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடாபானவை என்றும் தெரிவித்தார்.

அதேபோல சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் பதிவாகும் போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 24 சிறப்பு நீதிமன்றங்கள் மாநிலம் முழுதும் நிறுவப்பட்டுள்ளன என்றும், இதர குற்ற வழக்குகளுக்காக 21 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.