ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை சந்திப்பாரா? - சஞ்சய் ராவத் பதில்!

விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

News image

SANJAY RAUT SHIV SENA

Updated On :20 நவம்பர் 2019, 6:11 am

மகாராஷ்டிர விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக - சிவசேனை கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததாலும், அதன்பின்னர் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததாலும், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள்  இதில் கலந்துகொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை உள்ளிட்ட மூன்று கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என இன்று தெரியவர வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனை தலைமையில் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 'தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனவே, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். சிவசேனை ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் எங்களது எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள்' என்று கூறினார். 

தொடர்ந்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத்,  மக்களின் நலன் கருதி, முக்கியமாக விவசாயிகளின் நலனுக்காக உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடி அல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.