ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? வெங்கய்யா, சந்திரபாபு மற்றும் பவன் கல்யாணை கேள்வி கேட்ட ஜெகன்மோகன்

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

ஜெகன்மோகன்

Updated On :11 நவம்பர் 2019, 11:47 am

விஜயவாடா: உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் இனி அரசுப் பள்ளிகள் ஆங்கில வழி பள்ளிகளாகச் செயல்படும் என்று மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தரப்பிலும் பரவலாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளானது தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திங்களன்று நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜெகன்மோகன் பேசியதாவது:

இப்போதுள்ள உலகத்தில் போட்டியிடுவதென்றால் நமது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு என்பது அவசியம். எனவேதான் அதை மனதில் கொண்டு இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன் வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் அதை விமர்சிக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் நெஞ்சில் கை வைத்து அவர்களது வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.