/

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 'தலித் பெண்'ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்: ராகுல்

தலித் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 மே 2019, 6:55 am

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் தலித் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். 

கணவர் முன்பே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது வீட்டுக்குச் வியாழக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது,

அல்வார் சம்பவம் குறித்து அறிந்தவுடன், நான் அஷோக் கெலாட்டை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். இது அரசியல் விவகாரமல்ல. இதனால் பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளேன். இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.