/

மோடியை நீக்க விரும்பினார் வாஜ்பாயி; அதை தடுத்தது யார் தெரியுமா? யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு தகவல்

குஜராத் மாநிலம் கோத்ரா வன்முறையின் போது பாஜகவில் இருந்தே மோடியை நீக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி விரும்பியதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரபரப்புத் தகவலை 

News image
Updated On :11 மே 2019, 5:34 am


போபால்: குஜராத் மாநிலம் கோத்ரா வன்முறையின் போது பாஜகவில் இருந்தே மோடியை நீக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி விரும்பியதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

போபாலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பல கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் இது குறித்துப் பேசுகையில், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால்  வேதனை அடைந்த அடல் பிஹாரி வாஜ்பாயி, மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க விரும்பினார். இது குறித்து 2002ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் போது, அடல் பிஹாரி வாஜ்பாயி தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினார். மோடி முதல்வர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்தால், குஜராத்தில் ஆட்சியையே கலைத்து விடுவது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

ஆனால், இந்த முடிவுக்கு அத்வானி ஒப்புக் கொள்ளவில்லை. ஒருவேளை, முதல்வர் பதவியில் இருந்து மோடியை நீக்கினால், தான் (அத்வானி) மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வாஜ்பாயிக்கு நெருக்குதல் கொடுத்தார். அத்வானியின் இந்த நிலைப்பாட்டினால், வாஜ்பாயி தனது முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.