/

ஃபானி புயலிலும் அரசியல் செய்கிறார் 'வேகத்தடை' முதல்வர்: மோடி குற்றச்சாட்டு

ஃபானி புயலை வைத்தும் மோசமான அரசியல் செய்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :6 மே 2019, 12:30 pm


ஃபானி புயலை வைத்தும் மோசமான அரசியல் செய்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, ஃபானி புயல் பாதித்த ஒடிஸாவை பார்வையிட்டு திரும்பியிருக்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் தொலைபேசியில் பேச விரும்பினேன். அதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் மமதை பிடித்த மம்தா பானர்ஜி பேசவில்லை. அவர் மீண்டும் எனக்கு போன் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் போன் செய்யவேயில்லை என்று மோடி கூறினார்.

மேலும், வேகத்தடையான மம்தா பானர்ஜி, மாநில மக்களின் நலனைக் காட்டிலும் அரசியல் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார் என்று பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.