/

ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு

வங்கக் கடலில் உருவாகி நேற்று ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த நீட் தேர்வு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

ஒடிஸாவின் புரி நகரில் பானி புயலால் விழுந்த மரங்கள் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள்.

Updated On :4 மே 2019, 10:09 am


புது தில்லி: வங்கக் கடலில் உருவாகி நேற்று ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த நீட் தேர்வு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஒடிஸாவில் தற்போது மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நடந்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மறு தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.