/

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் பலி: மோடி கண்டனம்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்  பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :1 மே 2019, 9:38 am


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்  பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதலை ஒருகாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்த தைரியமான வீரர்களுக்கு எனது சல்யூட். அவர்களது தியாகம் ஒரு போதும் வீண் போகாது, தியாகத்தை மறக்கவும் முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.