கோவை: பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய விமானப் படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு இந்திய விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா கோவையில் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்திய விமானப் படை தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள சூலூர் விமானப் படை தளம் வழக்கம் போல சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்றார்.
அவரிடம், இந்திய எல்லையைத் தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் நவீன எஃப்-16 விமானத்துக்கு எதிராக இந்திய விமானப் படையின் மிகப் பழமையான மிக்-21 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது ஏன்? என்று செய்தியாளர் கேட்டதற்கு, இந்திய விமானப் படையில் இருக்கும் மிக் - 21 ரக போர் விமானம் பழைய விமானம் அல்ல, மேம்படுத்தப்பட்ட விமானம், 3வது தலைமுறையாக இந்திய விமானப் படையில் இணைந்து பணியாற்றும் நவீன அம்சங்களுடன் கூடியதே மிக் -21 ரக போர் விமானமாகும் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களில் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் பொறுத்ததே. தாக்குதலில் எவ்வளவு பேர் இறந்தனர்? என்பதை நம்மால் கணக்கிட முடியாது என்று இந்திய விமானப் படை தளபதி தனோவா தெரிவித்தார். மேலும், நாம் இலக்கை சரியாக தாக்கியதால்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பற்றிய கேள்விக்கு, அபிநந்தனுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் பணியில் மீண்டும் இணைவார் என்று தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமானங்கள் குறித்து கேட்டதற்கு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று தனோவா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


