புது தில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் விடியோக்களும், புகைப்படங்களும் பழைய புகைப்படங்கள் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படையைச் சேர்ந்த சு30-எம்கேஐ ரக விமானங்கள் வழிமறித்து விரட்டி அடித்தன. அப்போது ஒரு பாகிஸ்தான் போர் விமானம் மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத பாகிஸ்தானின் மற்ற போர் விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து வேகமாக வெளியேறின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முழு உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக இயக்கப்படும் விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அமிருதசரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


