புது தில்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தில்லி மற்றும் தில்லிக்கு வடக்கே உள்ள அனைத்து வான் பகுதியிலும் பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், தில்லிக்கு வடக்கே வான் பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
உத்தரகாண்டின் டேஹ்ராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையையும் கையாள வான்பகுதி தயார் நிலையில் வைக்கும் பொருட்டு, இந்தியாவின் தலைநகர் தில்லிக்குக் கிழக்கே உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


