புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ராணுவ நடவடிக்கையே அல்ல என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மிராஜ் 2000 போர் விமானங்கள் இன்று நடத்திய பதிலடித் தாக்குதலில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான 12 மிராஜ் போர் விமானங்கள் ஆயிரம் கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகளை, இந்திய எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது சில நொடிகளில் வீசிவிட்டு எந்த சேதமும் இன்றி திரும்பி வந்துள்ளது.
இந்திய எல்லையையொட்டியிருக்கும் பாலகோட், சாகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் முற்றிலும் தரைமட்டமாக்கித் திரும்பியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே, பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெ-இ-எம் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் ராணுவ நடவடிக்கையல்ல.
இந்த தாக்குதலில் ஜெ-இ-எம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், பயிற்சி பெற்று வந்த பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் என பலரும் கொல்லப்பட்டனர்.
ஜெ-இ-எம் பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மேலும் சில தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்ததால் அதனைத் தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடித் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் முக்கியம்சமாக இருந்ததாகவும் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


