ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

News image
Updated On :1 டிசம்பர் 2019, 7:19 am

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2016, பிப்ரவரி 18ம் தேதி மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு தற்போது 50 வயது. குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.56,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

இதுகுறித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் குமார் கூறுகையில், 'சுமார் 4 மாதங்களாக சிறுமி, அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும், இதனை யாருக்கேனும் தெரியப்படுத்தக்கூடாது என்று அவர் சிறுமியை அச்சுறுத்தியும் வந்துள்ளார், ஒருகட்டத்தில் சிறுமி இதனை வெளியில் சொல்லவே, அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.