ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பியில் ஒரு சுவாரசியம்! காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்ட போலீஸ் காதல்ஜோடி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரியும் இளம் காதல் ஜோடி, உயர் அதிகாரிகள் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். 

News image
Updated On :1 டிசம்பர் 2019, 11:49 am

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரியும் இளம் காதல் ஜோடி, உயர் அதிகாரிகள் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர், தியோபந்த் காவல் நிலையத்தில் வைத்து இளம் காதல் ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இருவருமே காவல்துறையில் பணியாற்றுபவர்கள்.

சஹாரன்பூரைச் சேர்ந்த குஷ்னசீப் மற்றும் அப்துல் மாலிக் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சஹாரன்பூர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் காவல் நிலையத்திலே நடைபெற்றது. இருவரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லிம் மத முறைப்படி, 'நிக்கா' நடைபெற்றது. காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

'எங்களது கடினமான காலங்களில் உதவியதற்காக நாங்கள் எப்போதும் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். காவல்நிலையத்தில் வைத்து எங்களது திருமணம் நடைபெற்றுள்ளது மிகவும் தனித்துவமானது. இந்நிகழ்வை என்றும் எங்களால் மறக்க முடியாது' என்று புதுமணத் தம்பதிகள் கூறியுள்ளனர். 

இந்தத் திருமண நிகழ்விற்காக காவல் நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அருகில் உள்ள பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.