/

ஃபானி புயல்: அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 7:17 am


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி வட இந்தியா நோக்கி பயணித்து வரும் ஃபானி புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, ஃபானி புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆயத்த ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். 

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் படையினரும் செயல்பட உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.