/

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த எம்.பி.

வடமேற்கு தில்லி தொகுதி பாஜக எம்பியான உதித் ராஜுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

News image
Updated On :24 ஏப்ரல் 2019, 7:14 am


புது தில்லி: வடமேற்கு தில்லி தொகுதி பாஜக எம்பியான உதித் ராஜுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் கட்சியில் இணைந்துள்ளார்.

இவர் போட்டியிட்டு வென்ற வடமேற்கு தொகுதியில் பஞ்சாபி சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தலித் பாதுகாப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிய உத்தரவுக்கு எதிராக தான் போராடிய காரணத்தால்தான், தனக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை என்று அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுபோல சபரிமலை உள்ளிட்ட சில விவகாரங்களிலும், கட்சியின் கொள்கைகளுக்கு இவர் முரண்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.