தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரயில்கள் மூலம் கேரளாவுக்கு படையெடுக்கும் ரோஹிங்கியா மக்கள்: கண்காணிப்பில் ஆர்பிஎஃப்

ரோஹிங்கியா மக்களின் ஊடுருவலைத் தடுக்க மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் ஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:56 pm

ENS


ரோஹிங்கியா மக்களின் ஊடுருவலைத் தடுக்க மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் ஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவிலான ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் படையெடுப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளாக தென்னிந்திய மாநிலத்துக்கு வரும் 14 ரயில்கள் மூலம் ஊடுருவ இருப்பதாக கேரளா மற்றும் தமிழகத்துக்கு இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையான ஆர்பிஎஃப், எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏராளமான ரோஹிங்கியா மக்கள் குடும்பம் குடும்பமாக கேரளாவுக்கு வருவதாகவும், ரயில்களில் ரோஹிங்கியா மக்களைப் பார்த்ததும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பிஎஃப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன அழிப்பு என்று கூறப்படும் வகையில் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ரோஹிங்கியாக்கள் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு தப்பித்து அங்கு குடியேறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.