பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இலவச மென்பொருள் விழா: கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் அனைவருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 12:49 pm

கேரளத்தில் அனைவருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. 

மென்பொருள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரள தொழில்நுட்ப கட்டுமான கல்வி அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

அக்டோபர் 2-ஆம் தேதி அனைவருக்கும் இலவச மென்பொருள் வழங்கவுள்ளோம். இவற்றில் ஆபரேடிங் சிஸ்டம் (ஓ.எஸ்.), லினக்ஸ், எம்.எஸ்.ஆஃபிஸ், டிடிபி, கிராஃபிக்ஸ், விடியோ மற்றும் ஆடியோ எடிட்டிங், அனிமேஷன், வெப் மற்றும் டேட்டாபேஸ் சர்வர் ஆகியன நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த மென்பொருள்கள் தொடர்பாக அரிய இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களை கேரள தொழில்நுட்ப கட்டுமான கல்வி அமைப்பின் இணையதளத்தில் (www.kite.kerala.gov.in)புதன்கிழமைக்குள் பதிவிட வேண்டும். தேவைப்படும் விவரங்களை தலைமை அலுவலகத்தில் மற்றும் 9447089009 என்ற தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்தது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.