தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:48 pm

ENS

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சருமான மஞ்சு சமீபத்தில் ஹாசன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் அம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் கூறியிருந்தார். அத்துடன் இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாஜக சார்பாக மாநிலம்  தழுவிய போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் புதனன்று நடைபெற்ற மாநில பாஜகவின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

ஹாசன் மாவட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ஆக்கிரமித்துள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3000 கோடி ஆகும். இந்தக் குற்றசாட்டு தொடர்பாக குமாரசாமி வாய் திறந்து எதுவும் சொல்லாத காரணத்தால், பொதுப்பணித்துறை அமைச்சரான ரேவண்ணா இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்.   

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.