தெலங்கானாவில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புது காதல் தம்பதி மீது பெண்ணின் தந்தை இன்று (புதன்கிழமை) மாலை கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் தெரிவித்ததாவது:
சந்தீப் (21) ஸ்விகியில் பணிபுரிகிறார். இவரும் மாதவி (21) என்ற பெண்ணும் திருமணத்துக்கு முன் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு மாதவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. சந்தீப்பின் பெற்றோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் உள்ளூர் போலீஸாரிடம் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் போரபந்தாவில் உள்ள சந்தீப்பின் பெற்றோர் இல்லத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில், இன்று மாலை சந்தீப் மற்றும் மாதவி இருவரும் எர்ரகடா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாதவியின் தந்தை வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த இளம் தம்பதியினர் வாகனத்தை நிறுத்தி இறங்கினர்.
அப்போது, மாதவியின் தந்தை நரசிம்மசாரி தனது பையில் இருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, இளம் தம்பதியினர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயல்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சந்தீப் உறவினர்கள் கூறுகையில், இரண்டு குடும்பத்தாரும் கடந்த 16-ஆம் தேதி சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சந்தீப்பும் மாதவியும் பிரிவதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த பேச்சுவார்த்தை கடுமையான விவாதமாக முடிந்தது. அதற்கு அடுத்த நாள் (17-ஆம் தேதி) மாதவியின் தந்தை மது அருந்திவிட்டு சந்தீப்பின் இல்லத்துக்கு வந்து தகாத வார்த்தைகளால் விமரிசித்தார் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


