பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சாலை இல்லாத அவலம்: வழியிலேயே குழந்தை பெற்று வீடு திரும்பிய தாயும் சேயும்

சமீபகாலத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும், தனி மனிதர்களிடமும் அதிகமாக பேசப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 5:49 am

சமீபகாலத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும், தனி மனிதர்களிடமும் அதிகமாக பேசப்பட்டது.

வளர்ந்த நாகரீக மக்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதையே பாதுகாப்பானது என்று கருதினாலும், சிலருக்கு அந்த வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலையாக உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டம் அருகே உள்ள மலைப்பிரதேசத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது வீட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சாலை வசதி இல்லாததால் கொம்பில் தொட்டில் கட்டி அவரை அவரது குடும்பத்தினர் தூக்கிச் சென்றனர்.
 

ஆனால் பிரசவ வலி அதிகமானதால், வழியிலேயே அவர் குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதால், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடு திரும்பியுள்ளனர்.

புகைப்படம், விடியோ : ஏஎன்ஐ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.