பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்: முன்னாள் முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம்

தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதீர்கள் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கினார்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 5:45 am


மைசூரு: தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதீர்கள் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கினார்.

புற்றுநோய் பரிசோதனை முகாமைத் துவக்கி வைத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, தான் எப்படி சிகரெட்டுக்கு அடிமையாகி இருந்தேன் என்பதையும், ஒரு நாள் அதனை விட்டுவிட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் வரைப் பிடிப்பேன். ஒரு முறை எனது நண்பன் வெளிநாட்டில் இருந்து ஒரு பெட்டி சிகரெட்டுகளை வாங்கி வந்தான். அது முழுவதையும் ஒரேநாளில் பிடித்துத் தள்ளிவிட்டேன். அப்போதுதான் எனக்கு குற்றஉணர்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினமே சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். சுமார் 31 ஆண்டுகள் ஆகிவிட்டது சிகரெட் பிடிப்பதை விட்டு. இப்போதெல்லாம் சிகரெட் புகையைக் கூட என்னால் சமாளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

பொதுவாகவே தீய பழக்கவழக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். ஆனால் அப்படி யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு வேளை புகைத்துக் கொண்டிருந்தால், புற்றுநோய் உருவாகும் முன்பே அதனை நிறுத்தி விடுங்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.