நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ரஜினி காந்த் நேரில் வந்து கர்நாடக அணைகளை பார்வையிட வேண்டும்: குமாரசாமி அழைப்பு

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்ககோரும் முன் அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ரஜினி காந்த் நேரில் வரவேண்டும் என்று

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

DIN

பெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீர் திறக்ககோரும் முன் அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ரஜினி காந்த் நேரில் வரவேண்டும் என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக நாளை மறுநாள் புதன்கிழமை (மே 23) பொறுப்பேற்கவுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, தனது சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று மாலை வழிபாடு நடத்தினார். 

நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது, புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள கோயில்களில் அவர் இன்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன்பாக, நடிகர் ரஜினி காந்த் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நிலைமையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்வார். 

அவ்வாறு கர்நாடகத்துக்கு ரஜினி காந்த் வருவாரானால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். அணைகளைப் பார்வையிட்ட பின்னும் தண்ணீர் திறந்துவிட ரஜினி காந்த் கோரினால் அதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் குமாரசாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.