தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள், தலைமறைவாக இருந்த 7 பேர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக

News image
Updated On :8 மே 2018, 6:51 am

பாராமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவத்தினரை நோக்கி, இளைஞர்கள் கல்வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறார்; 18-19 வயதில் மரணத்தை தழுவுவதற்காக அல்ல. ஏழை இளைஞர்களின் கைகளில் கற்களும், துப்பாக்கிகளும் உள்ளன. மாநிலத்தில் தொடரும் வன்முறையால் அப்பாவி இளைஞர்கள் பலியாகின்றனர். இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடுநிலையான வழிமுறையை மத்திய அரசு கண்டறிய வேண்டும். அதன் மூலம், மாநிலத்தில் இளைஞர்களும், போலீஸாரும், ராணுவத்தினரும் கொல்லப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மாநிலத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும்.

இளைஞர்கள் தங்களது சக்தியை, கனவுகளை, விருப்பங்களை சமூகத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும். மாநிலத்தில் மக்களும், ஊடகங்களும், மாணவர்களும், பெற்றோரும் இதர தரப்பினரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கியப் பங்காற்றி உதவ வேண்டும்.

பல்வேறு தரப்பினருடன் நடத்தப்படும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமாகவே, மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக இருந்த 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.