கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

12-ஆம் வகுப்பு பொருளியல் மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் 10-ஆம் வகுப்பு மறு தேர்வு குறித்து 15 நாட்களில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:36 pm

Raghavendran

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடம், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள், சமூகவலைதளங்களில் கசியவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 10-ஆம் வகுப்பு கணித பாடம், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மறு தேர்வுகள் எவ்வித இடர்பாடுகளுமின்றி சுமூகமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களையும் ஒழிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி புலனாய்வு காவல்துறை சிறப்பு புலனாய்வுப் படை அமைத்து தனித் தனியாக இரு வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது ஜார்கண்ட் மாநிலம், சத்ரா சதார் பகுதியில் 6 மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் 10-ஆம் வகுப்பு மறு தேர்வு குறித்து 15 நாட்களில் தெரிவிக்கப்படும் அப்படியென்றால் ஜூலை மாதத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.