மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (55). மது போதைக்கு அடிமையான இவா், வீட்டுக்கு சரிவர வருதில்லையாம். வீட்டுக்கு வந்தாலும் போதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சோனைமுத்து சுக்காங்கல்பட்டி பகுதியில் உள்ள குளத்தின் கரையில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோனைமுத்துவை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தகராறில் ஈடுபட்ட சோனைமுத்தை அவரது மகன் மணிகண்டன் (21) அடித்து கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்தனா்.