2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிலையான விலைக்கு எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை: தர்மேந்திர பிரதான் உறுதி

நிலையான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

Raghavendran

நிலையான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எரிவாயு தேவை அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருப்பதால் நிலையான எரிவாயு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து கடந்த சில வருடங்களாகவே இந்தியா, கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதனை இம்முறை நடைபெறவுள்ள எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மீண்டும் வலியுறுத்த உள்ளது. ஏனெனில் இந்தியாவின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் குரல் அங்கே எடுபடவில்லை. ஆனால், தற்போது நமது பயன்பாடு அதிகம் உள்ளதால், நம்முடைய குரல் இவ்விவகாரத்தில் உயர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

எரிவாயு பாதுகாப்பு தேவையான இந்த தருணத்தில், எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நடத்தும் இந்த கருத்தரங்கம், தடையில்லா எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.