நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 29 கைவினைப் பொருட்களுக்கு வரி விலக்கு, 49 பொருட்களின் வரி குறைப்பு

தில்லியில் நடைபெற்ற 25-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 49 பொருட்களின் மீதான வரியைக் குறைத்து வியாழக்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:00 pm

Raghavendran

தில்லியில் மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தின் முடிவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 49 பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டண வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வருகிற 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு கானொலி காட்சி மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.