நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு

பொது போக்குவரத்து முறை வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டயாம் பொருத்தப்பட வேண்டும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:00 pm

Raghavendran

ஏப்ரல் 1-ந் தேதி முதல் அனைத்து பொது வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 1, 2018 முதல் டாக்ஸி, பேருந்துகள், தனியார் வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து முறை வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் மற்றும் தற்காப்பு காரணமாக சப்தம் எழுப்பக்கூடிய பேனிக் பட்டன் எனப்படும் கருவிகள் கட்டயாம் பொருத்தப்பட வேண்டும்.

இவற்றில் இருந்து மூன்று சக்கர வாகனங்களான ஆட்டோக்கள் மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய இ-ரிக்ஷாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.