2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவிட மெஹபூபா முஃப்தி கோரிக்கை

ஹரியாணா மாநிலத்தில் காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கோரிக்கை வைத்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:09 pm

Raghavendran

காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் ஹரியாணாவில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கதில் பயின்று வருகின்றனர் இந்நிலையில், அங்குள்ள மஹேந்திரகர் என்ற மாவடத்தில் இருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை வழிபாடு முடித்து அந்த மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தின் காரணம் தெரியவில்லை. மேலும் இதில் படுகாயமடைந்த மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் ஹரியாணா அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி அந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநில காவல்துறை டிஜிபி உடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அங்குள்ள காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி சேஷ்பால் வெய்ட் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.