பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வீடு தேடி வரும் அரசின் 100 சேவைகள்: தில்லி முதல்வரின் அசத்தல் திட்டம்

செப்டம்பர் மாதம் முதல் தில்லி மக்களுக்கு அரசின் 100 விதமான சேவைகளும் வீடு தேடி வந்தடையும் அசத்தல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 9:36 am

செப்டம்பர் மாதம் முதல் தில்லி மக்களுக்கு அரசின் 100 விதமான சேவைகளும் வீடு தேடி வந்தடையும் அசத்தல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதன்மூலம் பள்ளிச் சான்று, சாதிச் சான்று, திருமணச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, வருமானச் சான்று, புதிய குடிநீர் இணைப்பு, மிண் இணைப்பு என அரசின் 100 விதமான சேவைகள் மக்களின் வீடு தேடி வரும் திட்டம் தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 100 விதமான சேவைகளையும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பெற முடியும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக செயலியின் மூலம் பார்கோட் ஸ்கேன் செய்து, பயோமெட்ரிக் பதிவு ஏற்படுத்தி ஒருவர் தனக்கு தேவையான சேவையை வீட்டிலேயே பெற முடியும். இதற்கான சேவைக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். 

அரசின் சேவைகள் உங்கள் வீடு தேடி வருகிறது. இந்திய அரசாங்கத்தில் இது ஒரு புரட்சிகர திட்டமாகும். இதனால் ஊழல் ஒழியும். மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி அனைத்து சேவைகளையும் பெற முடியும். உலகத்திலேயே இதுபோன்று அரசு சேவைகள் வீட்டிலேயே பெறுவது இதுவே முதன்முறையாகும். செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கவுள்ளது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.