பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது: பாஜக

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 7:38 am

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

கடந்த காலங்களில் நேரு குடும்பம் தான் மக்களின் பணத்தை அதிகம் கொள்ளையடித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணம் எதற்கு உதவாமல் போனது. எனவே இதனால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக ராகுலின் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் அரசியலில் அவர் தீவிரமாக இல்லை என்பதை காட்டியுள்ளது. மேலும் விமர்சிக்க எந்த காரணமும் இல்லாத காரணத்தால் தான், கடந்த உத்தர பிரதேச தேர்தல் முதல் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குற்றம்சாட்டி வருகிறார். 

ஜனநாயகத்தின் சிறந்த நீதிபதிகளாக மக்கள் தான் உள்ளனர். எனவே தான் அவர்கள் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிராகரிக்கவில்லை. அதன் தலைவர் ராகுலையும் சேர்த்து நிராகரித்துவிட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.