பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

25 மதகுகள் திறப்பு, 4 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: ஒடிஸாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹாநதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹிராகுத் அணை திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 11:03 am

மஹாநதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹிராகுத் அணை திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள மஹாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் குறுக்கே அமைந்துள்ள ஹிராகுத் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அந்த அணையின் 25 மதகுகளையும் செவ்வாய்கிழமை மாலை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், வெளியேறும் நீரின் அளவு 6 லட்சம் கன அடியாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமை இதன் அளவு 8 லட்சம் கன அடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வெளியேற்றப்படும் நீரின் அளவு 8 முதல் 8.5 கன அடியாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உஷார் நிலையில் இருக்குமாறு அம்மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறப்பு நிவாரணப்பிரிவு ஆணையர் பிஷ்னுபண்டா சேதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக சாம்பல்பூர், சோனேபூர், பௌத், நயாகர், அங்குல், கட்டக், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா மற்றும் ஜஜ்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் போதுமான அளவு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் போதுமான அளவு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சலந்தி நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாத்ராக் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.