கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

என்ஆர்சி விவகாரம்: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சிகள் குழு சந்திப்பு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்தனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:27 pm

ENS

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்தனர். 

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இந்த பதிவேட்டில், ஒரு இந்தியரின் பெயர் கூட விடுபடக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர். 

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவெ கௌடா தலைமையிலான இந்த எதிர்க்கட்சிகள் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், தெலுங்கு தேச கட்சியின் ஒய்எஸ் சௌத்ரி, தேசியவாத காங்கிரஸ் சார்பாக சுப்ரியா சுலே, திமுக சார்பாக திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சலீம், ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.