கான்பூர்: வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களை பெரிய அளவில் குறைக்க அனைத்து இந்திய தொழிற்கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருக்கும் பொறியியல் பாடப்பிரிவுகளில் பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் 1.3 லட்சம் அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான மாணவர்கள் பொறியியலை தேர்வு செய்வதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஏஐசிடிஇ இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏஐசிடிஇயின் முடிவை வரவேற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகள், ஏராளமான மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருப்பதை இந்த முடிவு தவிர்த்துள்ளது. இதன் மூலம், மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்புள்ள பிற கல்விகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றன.
மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியாததும், இருக்கும் மாணவர் சேர்க்கையில் போதுமான மாணவர்கள் சேராததும் ஏஐசிடிஇ-யின் இந்த முடிவுக்குக் காரணமாகும்.
பல தனியார் கல்லூரிகளில் எம்.டெக். படிப்புக்கான சோதனைக் கூடங்கள் இருப்பதில்லை. சில கல்லூரிகளில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. இதனால், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கல்வியறிவு கிடைக்காமல், அவர்கள் வேலை வாய்ப்புக்கான போட்டியில் பூஜ்யமாக நிற்கிறார்கள்.
தற்போது கிடைத்திருக்கும் புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் உள்ள 83 பொறியியல் கல்வி மையங்கள் தங்களது கல்லூரியில் இருக்கும் 24 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்களை நிரந்தரமாக ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளன. 450 கல்லூரிகள் சில இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகளை இந்த கல்வியாண்டோடு நிறுத்திக் கொள்ளவும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


