நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரூ.2,654 கோடி கடன் மோசடி விவகாரம்: குஜராத் தொழிலதிபர் கைது, சிபிஐ நடவடிக்கை

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:47 pm

Raghavendran

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

டைமண்ட் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனத்தின் அதிபரான நாராயண் பட்னாகர் மற்றும் அவரது மகன்கள் அமித் மற்றும் சுமித் ஆகியோரை ராஜஸ்தானில் சிபிஐ கைது செய்தது.

இவர்கள் 3 பேரும் இணைந்து பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.670.51 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.348.99 கோடி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.279.46 கோடியும் கடன் பெற்றுள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 654 கோடி கடன் திருப்பிச் செலுத்தவில்லை.

எனவே 2016–17–ஆம் நிதியாண்டில் இவைகள் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த 3 பேரும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாக வங்கிகளின் கூட்டமைப்பு சிபிஐ-யிடம் புகார் அளித்தன. மேலும் கடன் பெற போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பரஸ் மஹால் என்ற சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் பயங்கரவாத தடுப்பு படை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.