அப்பொழுது தில்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர், 'சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணையில் தேவையற்ற தாமதம் காட்டப்படுகிறது. இது இந்திய நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். எனவே, சிபிஐ தலைமையில் பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். ஏனெனில், இதில் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளும் உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்திருந்தார்.