காந்தி நகர்: ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்' ஆகத்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் ஓ.பி.சி வகுப்பினருக்காக 'தாகூர் சேனா' என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் இளம் தலைவரான அல்பேஷ் தாகூர், இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த நிகழ்வில் ராகுல் பேசியதாவது:
கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி வெளியிட்ட பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஒற்றை அறிவிப்பால் ஒட்டு மொத்த இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதேபோல டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் கருப்பு பண பிரச்சினையினை தீர்க்காவிடில் என்னைத் தூக்கில் இடுங்கள் என்று கூறினார். இவ்வாறு அவர் ஒட்டு மொத்தமாக இந்திய பொருளாதாரத்தினையே சிதைத்திருக்கிறார். அத்துடன் நிறுத்தாமல் அடுத்து அவர் கொண்டு வந்ததுதான் ஜி.எஸ்.டி.
நாங்கள் அதனை நாடு முழுமைக்கும் குறைவான அளவாக 18 சதவீதம் என்பதாக , ஒற்றை படிவம் கொண்டதாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டோம். ஆனால் தற்போதைய பாஜக அரசு அதனை அதிகபட்சமாக 28 சதவீதம் என்ற அளவுடன் மூன்று படிவங்கள் கொண்டதாக உருவாக்கியுள்ளது.
சுருக்கமாக சொல்வது என்றால் ஜி.எஸ்.டி என்பது 'கப்பார் சிங் டாக்ஸ்' ஆகத்தான் இருக்கிறது. (பிரபல இந்தி திரைப்படமான 'ஷோலே' வின் வில்லன் கதாபாத்திரப் பெயர்)
குஜராத்தின் பட்டிடார் சமூக தலைவரான நரேந்திர பட்டேலுக்கு பாஜக ரூ.1 கோடி கொடுத்து இழுக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் இந்தியாவின் மொத்த நிதியினையோ அல்லது உலகின் எல்லா வளத்தினையும் கொடுத்து வாங்க நினைத்தாலும், குஜராத்தின் இத்தகைய குரல்களை விலைக்கு வாங்கவோ அல்லது அடக்கி வைக்கவோ இயலாது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


