நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டு நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், 'கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின்படி நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்பொழுது அந்த வழக்குகளின் நிலை என்ன? அத்துடன் அதற்குப் பிறகு அரசியல்வாதிகள்மீது எதனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்