பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் தனியாக இருந்த வாலிபர்!

தாய் இறந்து விட்ட விபரம் தெரியாமல் இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

News image
Updated On :1 நவம்பர் 2017, 12:42 pm

கொல்கத்தா: தாய் இறந்து விட்ட விபரம் தெரியாமல் இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள பைக்கப்பரா என்னும் இடத்தில் அரசுக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் மிரா பாசு (67). அவருடன் அவரது மகனான அனிர்பன் பாசுவும் வசித்து வருகிறார். அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூரப்பப்டுகிறது.

இந்நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டினர் கூறியதால் காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கே மிரா பாசு இறந்து கிடந்தது தெரிய வந்தது. ஆனால் அவரது தாய் இறந்தது தெரியாமல், அதே வீட்டின் மற்றொரு அறையில் அவரது மகன் அனிர்பன் பாசு அடைக்கப்பட்டிருந்தார்.

சடலத்தின் நிலையை பார்த்த பொழுது மிரா இறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருப்பது போன்று காணப்பட்டது. பொதுவாகவே அனிர்பன் பசுவை அவரது தாயார் அறையில் அடைத்து வைத்திருப்பதன் காரணமாக அவருக்கு தாயார் இறந்த விஷயம் தெரியவில்லை.

அதேபோல் அவர்கள் இருவருமே அவ்வளவாக வெளியுலகத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் உடனடியாக இந்த சம்பவம் குறித்து வெளி உலகத்திற்கு தெரியவில்லை.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.